ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தஞ்சை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பு பிரச்னையை பேசும் படமாக தெருநாய்கள் என்ற படம் உருவாகி உள்ளது. ஸ்ரீ புவால் மூவி புரொடக்ஷ்ன் மற்றும் ஐ கிரியேஷன் என்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ஹரி உத்ரா என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். பிரதீக், அக்ஷ்தா என்ற புதுமுகங்களுடன் அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, ராம்ஸ், மைம்கோபி, மதுசூதனன் உள்பட பலர் நடித்துள்ளனர். தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரீஷ், சதீஷ் இசை அமைத்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் ஹரி உத்ரா கூறியதாவது:
இத்திரைப்படம் டெல்டா விவசாயக் கிராமங்களின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் விவசாயிகளின் பிரச்னையைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு, எனவே அதனை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" எனும் வள்ளலாரின் கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
"சமூகம் சார்ந்த நல்ல கருத்துகளை ஒவ்வொருவரும் தங்கள் திரைப்படத்தின் வாயிலாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது சினிமாவின் வளர்ச்சிக்கு நல்லது" எனப் படத்தைத் தணிக்கை செய்த சென்சார் குழு பாராட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பார்க்கும் விதமாக இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. அடுத்த மாதம் படத்தை வெளியிடுகிறோம். என்றார் ஹரி உத்ரா.