ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினிகாந்த் கடந்த மாதம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த நிகழ்வின் போது தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். "என் வாழ்க்கை கடவுள் கையில் இருக்கிறது. எதிர்காலத்தில் என்னவாக நான் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அது நடக்கும். ஒரு வேளை நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன். நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்கினால் தான் நாடு உருப்படும். ரசிகர்கள் ஊருக்கு சென்று அவரவர் கடமைகளைச் செய்யுங்கள். போர் வரும்போது பார்த்துக்கொள்வோம்” என்று கூறினார்.
ரஜினியின் இந்த அரசியல் பேச்சை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “போர் போர் அப்படின்னு கேட்டு போரடிக்குது. அக்கப்போர். நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருட கணக்கில் யோசிப்பவர்.” என்று குறிபிட்டார்.
இதனால் ரஜினி ரசிகர்கள் கஸ்தூரியை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதில் அளித்த கஸ்தூரி, “நான் அதிதீவிர ரஜினி ரசிகை. இப்ப பேசினது விமர்சனம் இல்ல. விரக்தி. எல்லார் மனசுலயும் இருக்கிற ஆதங்கத்தைத்தான் சொல்லி இருக்கேன்” என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் திடீரென சந்தித்து பேசினார் கஸ்தூரி. சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் கஸ்தூரி தனது விளக்கத்தை கூறி மன்னிப்பு கேட்டதாகவும் தனது கருத்து ரசிகர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் அவர் ரஜினியிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதனிடையே ரஜினியுடனான சந்திப்பு குறித்து கஸ்தூரி தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... "சிறந்த பிறந்த நாள் ஆச்சரியம். ரஜினியுடன் நேருக்கு நேராக சந்திக்கும் வாய்ப்பு. உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. ரஜினியின் அரசியல் பார்வை, திட்டங்கள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பு பெற்றேன். எல்லாம் நல்லபடியாக அமையும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.