ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு அவரும் புழல் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை மையமாக வைத்து சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் படமாக தயாரித்துள்ளனர்.
"என் அனுமதி இல்லாமல் படம் தயாரித்துள்ளனர். இந்தப் படம் வெளிவந்தால் எங்கள் குடும்பம் மனரீதியாக பாதிக்கப்படும். எனவே படத்தை தடை செய்ய வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் படத்தின் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன், தயாரிப்பாளர் சுப்பையா, கதை ஆசிரியர் ரவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த மூவரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மூவரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை வருகிற 21ந் தேதிக்கு தள்ளி வைத்தது. அதுவரை மூவரையும் கைது செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டது.