ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். ஸ்ரேயா, தமன்னா கதாநாயகிகளாக நடித்துள்ள இந்தப்படத்துக்கு, யுவன் இசையமைத்துள்ளார்.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் ஜூன் 23-ம் தேதி வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்காக செம குண்டாகிவிட்ட சிம்பு, தற்போது பழைய உடம்பைக் கொண்டு வர முடியாமல் தவித்து வருகிறார். இதற்கிடையில், இனிமேல் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போல் வித்தியாசமான படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
“இதுவரை வித்தியாசமான படம் பண்ண வேண்டும் என்று நினைத்துத்தான் 'வானம், தொட்டி ஜெயா, விண்ணைத்தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களில் நடித்தேன். இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன். வித்தியாசமாக நடித்த எனக்கு விருதுகள் கொடுத்து பாராட்டிவிட்டார்களா என்ன?. ஒன்றுமே இல்லை. வித்தியாசமாக படங்கள் செய்து ஏமாந்து போவதை விட, ரசிகர்களுக்காக படம் செய்யலாம் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் சிம்பு.
இப்படி புலம்பும் அளவுக்கு சிம்புவை விரக்தியடைய வைத்த விஷயம் எது?