ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு தொடரில் ஜோடியாக நடித்து வருகிறவர்கள் சமீராவும், அன்வரும். இருவரும் நிஜத்திலும் காதலர்கள். தற்போது இருவரும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் றெக்க கட்டி பறக்குது மனசு என்ற தொடரை தயாரித்து ஒளிபரப்புகிறார்கள். இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். சமீரா ஹீரோயினாக நடிக்கிறார். அன்வர் தயாரிப்பு பணிகளை கவனித்துக் கொள்கிறார்கள்.
இந்த தொடர் மராட்டி மொழியில் ஒளிபரப்பான ஒரு காதல் தொடரின் ரீமேக் ஆகும். இதன் படப்பிடிப்புகள் தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கான புரமோ பாடலை சினிமா பாடலுக்கு நிகராக படம் பிடித்திருக்கிறார்கள். இந்த தொடர் வருகிற 19ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. திருமணமே வேண்டாம் என்று இருக்கும் ஒரு ஆஞ்சநேய பக்தனுக்கும், மனசெல்லாம் காதல் நிறைந்திருக்கும் ஒரு டீச்சருக்குமான காதல் கதை இது.