ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் சேர்ந்து சுமார் ரூ.2500 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளன. இவை தியேட்டர் வசூல் மட்டும்தான். இன்னும் மற்ற வியாபாரங்கள் அனைத்தையும் சேர்த்தால் சுமார் ரூ.3000 கோடி வரை வரும் என்கிறார்கள். இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.300 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கலாம் என்பதுதான் திரையுலக வட்டாரத் தகவலாக இருக்கிறது.
'பாகுபலி' படத்தை உருவாக்கும் போதே நடிகர்களின் சம்பள விஷயங்களிலும் சரியான சம்பளத்தைத் தர வேண்டும் என்பதில் தயாரிப்பு நிறுவனம் உறுதியாக இருந்ததாம். அதற்கேற்றபடிதான் படத்தில் நடித்த அனைவருக்கும் சம்பளம் தந்தார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.
படத்தின் நாயகன் பிரபாஸுக்கு மட்டும் 80 கோடி வரை சம்பளம் கொடுத்துள்ளதாகத் தற்போது செய்திகள் பரவி வருகின்றன. இந்தப் படத்திற்காக வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் நான்கு வருடங்கள் வரை தன் ஒத்துழைப்பு அனைத்தையும் வழங்கியவர் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், படத் தயாரிப்பில் பிரபாஸும் ஒரு பங்குதாரர் தான் என்று டோலிவுட் வட்டாரங்களிலும் ஒரு பேச்சு உள்ளது. அதனால்தான் அவர் இந்தப் படத்தைத் தவிர வேறு எந்தப் படத்திலும் நடிக்க சம்மதிக்கவில்லை என்கிறார்கள்.
எப்படியிருந்தாலும் 'பாகுபலி' தயாரிப்பாளர்கள் தற்போது பல கோடிகளில் புரள ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு அவர்களது தைரியமும், துணிச்சலும்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.