சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் அருந்ததி நாயர். கேரளத்து நடிகையான இவர் அந்த படத்தில் ஜெயலட்சுமி, ஐஸ்வர்யா என இரண்டு விதமான வேடங்களில் நடித்திருந்தார். ஆனால் அதன்பிறகு எந்த புதிய படங்களிலும் கமிட்டாகாமல் கேரளாவிலேயே முகாமிட்டிருந்த அருந்ததி நாயர், தற்போது திடீரென்று ஒரே நேரத்தில் நான்கு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், சைத்தான் படத்தில் எனக்கு வெயிட்டான நாயகி வேடம் கொடுத்திருந்தார்கள். அதனால் அதன்பிறகும் அந்த மாதிரியான நல்ல வேடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எனக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கிளாமர் கலந்த கதாபாத்திரங்களாக வந்தன. அதனால் அந்த படங்களை நான் தவிர்த்து விட்டேன். இந்நிலையில், தற்போது அஜ்மலுடன் ஜூலை 16 -என்ற படத்தில் நடிக்கிறேன். இந்த ஹாரர் படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாயகியாக நடிக்கிறேன். யாவரும் வல்லவரே என்ற படத்தில் நடிக்கிறேன். ஐந்து கதைகளில் உருவாகும் இந்த படத்தில் சமுத்திரகனியும் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
மேலும், 100 டிகிரி என்ற படத்தில் நான் ஏற்கனவே நடித்தேன். பின்னர் படப்பிடிப்பு நடக்கவில்லை. இப்போது மறுபடியும் தொடங்கியிருக்கிறது. இந்த படங்களுடன் மலையாளத்தில் ஜூடு ஆண்டனியுடன் அனுராகம் என்ற படத்தில் நடிக்கிறேன். இதன்படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆக, விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்திற்கு பிறகு பல படங்களின் கதை பிடிக்காமல் தவிர்த்து வந்த நான் இந்த படங்களின் கதைகள் பிடித்து நடித்து வருகிறேன். இந்த படங்கள் என்னை சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்த்தும் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் அருந்ததி நாயர்.