மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை உள்பட பல படங்களை இயக்கிய ஆர்.கண்ணன், தனது நண்பர் எம்.கே.ராம் பிரசாத்துடன் இணைந்து இவன் தந்திரன் என்ற படத்தை தயாரித்துள்ளார். அவரே இயக்கியும் உள்ளார். கவுதம் கார்த்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி, மன்சூரலிகான் உள்பட பலர் நடிதுள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.சிவா பேசியதாவது:
தமிழ் படங்களின் பாடல்கள், காட்சிகளை டி.வி.சேனல்கள் ஒளிபரப்புவதற்கு சில கட்டுப்பாடுகளை தயாரிப்பாளர் சங்கம் கொண்டு வந்துள்ளது. இது எந்த வழியிலாவது தயாரிப்பாளர்களுக்கு பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் சில சிக்கல்கள் இருக்கிறது. அது விரைவில் தீர்க்கப்படும். நான் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் இல்லாவிட்டாலும் அவர்கள் நல்ல நோக்கத்துக்காக செய்வதை பாரட்டத்தான் வேண்டும்.
திருட்டு விசிடி, ஆன்லைன் பைரசி, படத் தயாரிப்பின் பட்ஜெட் உயர்வு, தியேட்டர் பற்றாக்குறை இப்படி பல விஷயங்களால் சினிமா தொழில் நசிந்து வருகிறது. அடுத்து ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சினிமா அழியும் நிலைக்கு வந்திருக்கிறது. இந்த நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கொடுத்த ஒரு வாய்ஸால் ஆட்சி மாறியது. அதுபோன்று இப்போது சினிமாவை காப்பாற்ற அவர் வாய்ஸ் கொடுக்க வேண்டும். அவர் வாய்சுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கும், கேட்கும், பிரச்சினைகளை தீர்க்க முன்வரும். ரஜினி நினைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இப்போது அவர் வாய்ஸ் கொடுத்து காப்பாற்றாவிட்டால் சினிமாவை யாராலும் இனி காப்பாற்ற முடியாது. ஏற்கனவே நடிகர் கமல் தானாக முன்வந்து ஜிஎஸ்டி.,க்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். அதேப்போன்று ரஜினியும் குரல் கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த சினிமா சார்பில் கேட்டு கொள்கிறேன் என்றார்.