ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் கானா பாடகரான கானா பாலா போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார். "சாலை விதிகளை மதிச்சு பாரு... சாவே இல்லாம நிலைச்சு வாழு...." என்று தொடங்கும் இந்த பாடலில் மஞ்சள் கோட்டை தாண்டாதீங்க, வெள்ளை கோட்டை மீறாதீங்க, சிக்னலை மதிச்சு நில்லுங்க, குடித்து விட்டு வண்டி ஓட்டாதீங்க, ஹெல்மெட் அணியுங்க, சீட் பெல்ட் போடுங்க என பல சாலை விதிகளை பாடலாக பாடியுள்ளார். அதற்கான காட்சிகளை இணைத்து வீடியோவாகவும் தயாரித்துள்ளனர்.
இந்த விழிப்புணர்வு பாடல் கேசட்டை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று வெளியிட்டார். இதனை கானா பாலா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சில் அந்த பாடலை கானா பாலா பாடினார். இந்த பாடல் திரையரங்குகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும் என போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
பின்னர் கானா பாலா நிருபர்களிடம் கூறியதாவது: நான் இனிமேல் சினிமாவில் பாடுவதில்லை என்று முடிவு செய்து விட்டேன். பணத்துக்காக இனி பாடமாட்டேன். இதுபோன்று மக்களுக்கு நன்மை தரும் விஷயங்களுக்காக மட்டுமே பாடுவேன். அதையும் இலவசமாக பாடி கொடுப்பேன். மாஞ்சா நூல் ஆபத்தை விளக்கியும் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். விரைவில் அதனை வெளியிடுவேன் என்றார். கானா பாலா சென்னை ஐகோர்ட்டில் வக்கிலாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.