ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மூத்த மற்றும் கைவிடப்பட்ட நடிகர், நடிகைகளுக்காக முதியோர் இல்லம் கட்ட இருக்கிறது நடிகர் சங்கம். தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டடம் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் நகருக்கு வெளியே அமைதியான சூழ்நிலையில் முதியோர் இல்லம் கட்டும் பணி ஒன்றையும் துவக்கி உள்ளது.
பழம்பெரும் நடிகர்கள் பலர் தற்போது வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். மகன், மகள்களால் கைவிடப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில்கூட வடபழனி கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த துணை நடிகை ஒருவரை கண்டுபிடித்தனர். இப்படி பலர் அநாதைகளாகி உள்ளனர். அவர்கள் தங்கள் இறுதிக் காலத்தை மகிழ்ச்சியுடன் கழிக்கும் வகையில் முதியோர் இல்லம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கைவிடப்பட்ட மூத்த நடிகர், நடிகைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. முதியோர் இல்லம் கட்ட நடிகை லலிதாகுமாரி புறநகரில் இருக்கும் தனக்கு சொந்தமான இடம் ஒன்றை தருவதற்கு ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர இன்னும் சில நடிகர்கள் கட்டடம் கட்டி தருவதாகவும் கூறியிருக்கிறார்கள். சுமார் 3 கோடி ரூபாய் செலவில் இந்த முதியோர் இல்லத்தை கட்ட நடிகர் சங்கம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.