ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்லி இயக்கத்தில் நடித்து வரும் 61வது படத்தில் அப்பா, 2 மகன்கள் என மூன்று விதமான வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, மூன்று வேடங்களில் மூன்று மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்துள்ள விஜய்யின் நடிப்பு அபாரம் என்று சமீபத்தில் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து சிம்புவும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில், இப்போது சமுத்திரகனியும் இணைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தந்தையாக நடித்த சமுத்திரகனி, அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அதே வேடத்தை தொடர்ந் திருக்கிறார்.
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தில் வில்லனாக நடிக்கும் சமுத்திரகனி மூன்று வேடங்களில் நடிக்கிறாராம். மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தில், ஒரு பாகத்திற்கு ஒரு வில்லன் என மூன்று வேடங்களில் நடிக்கிறாரா? இல்லை ஒரே பாகத்தில் மூன்று கெட்டப்புகளிலும் சமுத்திரகனி தோன்றுகிறாரா? என்பது சஸ்பென்சாக உள்ளது.