மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சமுத்திரகனியின் தொண்டன் படத்தில் அவரது தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார் அர்த்தனா. ஆனால் அர்த்தனா முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஜி.பி.பிரகாஷ் நடித்துள்ள செம படத்திற்குத்தான். வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நடிகை தேடினார்கள். முதல் பாகத்தில் நடித்த சரண்யா மோகன் திருமணமாகி செட்டிலாகிவிட்டதால் அவரைப்போன்ற துறுதுறுப்பான நடிகை தேடியதில் சுசீந்திரனுக்கு கிடைத்தவர் அர்த்தனா. மூன்றாவதாக ஒப்பந்தமான படம்தான் தொண்டன். இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டே தான் மூன்றாவது படத்தில் தங்கையாக நடித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
முதல் படத்தில் தங்கையாக அறிமுகமாகிவிட்டீர்களே என்று எல்லோரும் வருத்தமாக கேட்கிறார்கள். தங்கையாக நடிக்கிறது அவ்வளவு பெரிய தப்பா. சமுத்திரக்கனி சார் இயக்கம், நடிப்பு என்றதும் கதையே கேட்காமல் ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்புக்கு இரண்டு நாள் முன்னாடி போன் பண்ணி என் கேரக்டர் பற்றி ஒரு வரியில் சொல்லுங்க நான் ரெடியா வர்றேன். என்றேன் "என் தங்கை, நல்ல மங்கை" என்று மட்டும் சொன்னார். துணிந்து நடித்தேன். என் நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாததை அவரது தங்கை கேரக்டர் மூலம் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. அடுத்து இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். ஆனாலும் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன். நல்ல கதை, நல்ல கேரக்டர் கிடைத்தால் எந்த கேரக்டரிலும் நடிப்பேன் என்கிறார் அர்த்தனா.