ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது ஒளிபரப்பாகி வரும் குலதெய்வம் தொடரில் துரைப்பாண்டி என்ற முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறவர் ஈ.வி.கணேஷ் பாபு. தூர்தர்ஷனில் தொகுப்பாளராக பணி தொடங்கி அதன் பிறகு தென்பாண்டி சிங்கம் தொடரில் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு சீரியல் நடிகர் ஆனார். 20க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். ஆட்டோகிராப், அனந்தபுரத்து வீடு, சிவாகாசி உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். யமுனா என்ற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.
கணேஷ் பாபுவின் 25 வருட கலைச்சேவையை பாராட்டி பெங்களூருவில் உள்ள இண்டியன் வெர்ச்சுவல் யுனிவர்சிட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இதுகுறித்து கணேஷ்பாபு கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் சாதாரண விவாசய குடும்பத்தில் பிறந்தவன். 14 வயதிலிருந்து எழுத ஆரம்பித்தேன். பத்திரிகையாளராக, எழுத்தாளராக, நடிகராக, இயக்குனராக பயணித்து வந்திருக்கிறேன். இந்தியா முழுவதும் பயணம் செய்து தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். இந்த எனது சேவைகளை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கி உள்ளனர். இந்த பட்டத்துக்கு நான் தகுதி உள்ளவனா என்பது தெரியாது. தகுதியுள்ளவனாக ஆக்கிக் கொள்ள தொடர்ந்து உழைப்பேன். என்கிறார் கணேஷ்பாபு.