ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தத் தலைப்புக்கு அனுமதி அளித்தது யார் ?
தமிழ்த் திரையுலகில் தமிழில் பெயர் வைத்து வெளிவரும் படங்களுக்கு வரி விலக்கு என கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரி விலக்கு என்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்குத்தான் பயனாக இருக்க வேண்டும். மாறாக படத்தயாரிப்பாளர்களுக்கு பயனிளிப்பதாகத்தான் இருந்து வருகிறது. வரும் ஜுலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் இந்த வரி விலக்கும் இல்லாத நிலைதான் வரும்.
தமிழில் பெயர் வையுங்கள் என்பதைக் கூட திரைத் துறையினரிடம் வரி விலக்கு தருகிறோம் என்று சொல்லித்தான் தமிழை வளர்க்க வேண்டியதாக உள்ளது. அந்த அளவிற்கு தமிழ்ப் படம் எடுப்பவர்களின் மொழிப் பற்று உள்ளது.
சமீபத்தில் ஒரு படத்திற்கு 'என் ஆளோட செருப்பைக் காணோம்' என தலைப்பு வைத்தார்கள். அதைத் தொடர்ந்து நேற்று ஒரு படத்தின் விளம்பரம் வெளிவந்ததைப் பார்த்த போது அது இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறதே என வேதனையாக உள்ளது.
எத்தனையோ நல்ல தமிழ் வார்த்தைகள் நம் மொழியில் இருந்து கொண்டிருக்க சில படங்களின் தலைப்புகள் மிகவும் கேவலமாக வைக்கப்பட்டு வருகின்றன. நேற்று வெளியிடப்பட்ட ஒரு படத்தின் தலைப்பு 'இவளுக இம்சை தாங்க முடியல'. பெண்களை சமமாக நடத்த வேண்டும், மரியாதையாக அழைக்க வேண்டும் என்று மகளிர் குரல் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கும் வேளையில் இப்போது இப்படியொரு தலைப்பு வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மாதிரியான தலைப்புகளுக்கும் நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும் என்று படக்குழுவினருக்கு தெரியாதா...? இல்லை மலிவான விளம்பரங்களுக்காக இப்படி வைத்திருக்கிறார்களா...? என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.
இப்படி ஒரு தலைப்புக்கு அனுமதி கொடுத்தது யார்?.