ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி, அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படம் வருகிற 16ந் தேதி வெளிவருகிறது. இதுபற்றி உமாபதி கூறியதாவது:
நான் படித்து ஏதாவது நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் அப்பாவின் ஆசையாக இருந்தது. அதனால் என்னை எந்த படப்பிடிப்புக்கும் அழைத்துச் செல்ல மாட்டார். வீட்டில் சினிமா பற்றி பேச மாட்டார். ஆனால் எனக்கு நடிக்க வேண்டும் என்கிற ஆசை. அப்பாவிடம் சொன்னபோது "நான் எந்த உதவியும் செய்ய மாட்டேன். யாரிடமும் சிபாரிசுக்கு போக மாட்டேன். நீயே சொந்தமாக முயற்சித்து ஜெயிக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டார்.
நானேதான் சண்டை, நடனம், நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டேன். தம்பி ராமய்யா மகன் என்று சொல்லிக் கொள்ளாமலேயே வாய்ப்பு தேடினேன். அப்படித்தான் யுகபாரதி அங்கிள் மூலமாக அதாகப்பட்டது மகாஜனங்களே ஆடிசனில் கலந்து கொண்டேன். எனக்கு பல டெஸ்ட்டுகள் வைத்து தேர்வு செய்தார்கள். படப்பிடிப்புக்கு செல்வது வரை நான் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது.
தம்பி ராமய்யமா மகன் என்றதும் கதையை சொன்னார்கள். கதையை கேட்ட அப்பா நன்றாக இருக்கிறது. ஆனால் என் மகன் நடிக்கிறான் என்பதற்காக எந்த உதவியையும் என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று கூறிவிட்டார். படப்பிடிப்புக்குகூட வரவில்லை. கடைசியாக படத்தை பார்த்துவிட்டு நல்லா நடிச்சிருக்க. உங்கிட்டையும் திறமை இருக்கு. இன்னும் முயற்சி பண்ணு பெரிய இடத்துக்கு வரலாம் என்று வாழ்த்தினார். என்கிறார் உமாபதி.