ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் பாண்டிராஜ் குறுகிய காலத்தில் இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல அவதாரங்களை எடுத்தவர். பசங்க புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து வருகிறார். இவரது உதவியாளர்கள் பலரும் இப்போது தனியாக படம் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பாண்டிராஜிடம் நீண்ட காலம் உதவியாளராக இருந்த வள்ளிகாந்த் செம படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். இந்தப் படத்தை பாண்டிராஜ் தனது பசங்க புரொடக்ஷன் மூலம் தயாரித்திருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா, மன்சூரலிகான் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் வள்ளிகாந்த் படத்தை தயாரித்தது ஏன் என்பது குறித்து பாண்டிராஜ் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
என்னிடம் உதவியாளராக இருப்பது மிகவும் கடினம். எல்லாவற்றிலும் 100 சதவிகிதம் பெர்பக்ஷன் பார்ப்பேன். என்னை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே என்னிடம் உதவியாளராக இருக்க முடியும். சின்ன விஷயங்கள்கூட என்னை கோபப்படுத்தி விடும். முகத்துக்கு நேராக திட்டிவிடுவேன். என்னையும் சகித்துக் கொண்டு இருந்தவர் வள்ளிகாந்த். பல நாட்கள் கோபித்துக் கொண்டு சென்று விடுவார். பிறகு அவரே வந்து விடுவார். நல்ல மனசுக்காரர்.
என்னிடம் அதிகம் திட்டு வாங்கியவர்கள் என் மனைவியும், வள்ளிகாந்தும்தான். என் கோபங்களை வெறுமைகளை அவர்கள் மீதுதான் இறக்கி வைத்திருக்கிறேன். சில நேரங்களில் நான் செய்வது தவறு என்று தோன்றும், நல்ல கணவனாக, நல்ல இயக்குனராக இல்லையோ என்றுகூட நினைப்பேன். அதனால் எனது மன நிறைவுக்காக என்னிடம் அதிக திட்டு வாங்கிய மனைவிக்கு அவர் ஆசைப்பட்ட மாதிரி வீடு வாங்கி கொடுத்தேன். வள்ளிகாந்த் ஆசைப்பட்ட மாதிரி அவனை இயக்குனர் ஆக்கினேன். என்றார்.