ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கபாலி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி - ரஞ்சித் கூட்டணி இணைந்துள்ள படம் காலா. இதன்முற்கட்ட படப்பிடிப்பு மும்பையின் தாராவி பகுதியில் நடந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்பியிருக்கிறார். ரஜினி, மும்பையில் இருந்தபோது மகாராஷ்டிரா முதல்வர் தேவந்திரநாத் பட்னாவிஷின் மனைவி அம்ருதா சந்தித்து பேசினார். இதுப்பற்றி அம்ருதா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், ரஜினியை சந்தித்தேன், சமூகத்தில் நிலவும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பேசினோம் என்றார்.
இதற்கிடையே ரஜினியை, அம்ருதா சந்தித்தன் காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, அம்ருதா பாடுவது, நடனம் ஆடுவது போன்ற கலையில் மிகவும் ஆர்வம் மிக்கவர். சமீபத்தில் கூட அமிதாப் பச்சன் உடன் இணைந்து பிர் சே என்ற ஆல்பத்தில் ஆடி, பாடி, நடித்திருந்தார். ஆகையால் அம்ருதாவை, காலா படத்தில் ஒரு பாட்டு பாட வைக்க தான் இந்த சந்திப்பு நடந்தது என்றும், காலா படத்தின் மூலம் அம்ருதா தென்னிந்திய படத்தில் அதுவும் தமிழில் பாடகியாக அறிமுகமானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். அதேசமயம், இவர் பாடுவது உறுதி என்று கூறப்படுகிறது. ஆனால் அதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.