ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகமான மொட்டை ராஜேந்திரன் இப்போது மோஸ்ட் வாண்டட் காமெடி நடிகர். அவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிசியாக இருக்கிறார். 60 வயதுக்கு மேல் சினிமாவில் பிரபலமாகி இன்றைக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
இப்போது தங்கரதம் என்ற படத்தில் அவருக்கு பெரிய ஹீரோக்களுக்கு வைப்பது போன்று ஓப்பனிங் பாடலும் வைத்திருக்கிறார்கள். "மொட்டை தலை மச்சானுக்கு முடி இருந்தா அழகு தங்கரதம் போல ஸ்டீல் பாடி உடம்பு..." என்று அந்த பாடலும் அவரை புகழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது. பாடலில் அவருடன் ஆடியிருப்பவர் பிரபல கவர்ச்சி நடன நடிகை டிஸ்கோ சாந்தியின் இளைய சகோதரி சுசித்ரா. வெற்றி, அதிதி கிருஷ்ணா, சவுந்தரராஜா நடித்துள்ள இந்தப் படத்தை பாலமுருகன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:
இந்த படம் ஒட்டன் சத்திரம் காய்கறி சந்தையை பின்னணியாக கொண்டு தயாராகியிருக்கிறது. இந்த சந்தைக்கு டெம்போவில் காய்கறிகளை ஏற்றி வரும் இரண்டு இளைஞர்களை சுற்றிப் பின்னப்பட்ட யதார்த்மான வாழ்வியல் கதை தான் இந்த படம். இந்த படத்திற்காக பரபரப்பாக காணப்படும் இந்த ஒட்டன் சத்திரம் சந்தையை ஏழு நாட்கள் யாரும் எதிர்பாராத வகையில் படமாக்கியிருக்கிறோம். இது தமிழ் சினிமாவிற்கு புதியதாக இருக்கும்.
படத்தில் நாயகனாக வெற்றியும், மற்றொரு நாயகனாக சௌந்தரராஜாவும் நடித்திருக்கிறார்கள். சௌந்தரராஜாவின் தங்கையாக அதிதி கிருஷ்ணா நடித்திருக்கிறார். காதல் காட்சிகளாகட்டும், ஏனைய காட்சிகளாகட்டும் எல்லாமே யதார்த்தம் மீறாத வகையிலேயே திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்தியிருக்கிறேன்.
படத்தில் மலைச்சாமி என்ற கேரக்டரில் விவசாயியாகவும், எந்நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் குடிகாரராகவும் நான் கடவுள் ராஜேந்திரன் நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு ஒரு பாடல் காட்சியை வைத்திருக்கிறோம். அந்த பாடல் வரிகளை நான் எழுதியிருக்கிறேன். அந்த பாடல், படம் வெளியானவுடன் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். என்றார் பாலமுருகன்.