ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷனுக்கு தமிழில் காலூன்றிவிட வேண்டும் என்று ஆசை. அதனால் சின்ன சின்ன கம்பெனிகள் தயாரிக்கும் படங்களில் நடித்தாவது தன் இருப்பை தக்க வைத்து வருகிறார். அது மட்டுமல்ல, ஓரளவு சுமாரான கம்பெனியாக இருந்தால், தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி ஆந்திராவில் உள்ள பைனான்சியர்களிடம் பைனான்ஸ் வாங்கிக் கொடுக்கிறாராம்.
அப்படித்தான் சந்தீப் நடிப்பில் வெளியான தமிழ்ப்படங்கள் உருவாகி இருக்கின்றன. மாநகரம் படத்தை அடுத்து தற்போது சுசீந்திரன் இயக்கி வரும் 'அறம் பழகு' படத்தில் நடித்திருக்கிறார் சந்தீப். 'மாவீரன் கிட்டு' படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கியுள்ள படம் இது. சந்தீப் உடன், மெஹரீன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி உள்ளிட்டோர் நடித்துள்ள 'அறம் பழகு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இதனை தொடந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிசியாகியுள்ளார் சுசீந்திரன். அறம் பழகு படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து தானே வெளியிட திட்டமிட்டுள்ளாராம் படத்தின் ஹீரோவான சந்தீப்.