ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பாண்டி. அதன்பிறகு மெரினா, கோலி சோடா, படங்களில் காமெடியனாக நடித்தார். அடுத்து ஒரே பாய்ச்சலாக ஹீரோவாகி விட்டார். என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் கயல் ஆனந்தியுடன் நடித்து வருகிறார். தனது பெயரையும் தமிழ் என்று மாற்றிவிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது...
பசங்க படத்தில் பாண்டிராஜ் சார் என்னை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்தேன். என்னுடைய நண்பர்கள் நீ பிற்காலத்தில் பெரிய காமெடி நடிகனாக வருவாய் என்றார்கள். ஆனால், என் மனசுக்குள் ஹீரோவாக வேண்டும் என்கிற லட்சியம் தான் இருந்தது. இந்த நேரத்தில் எனது நண்பர் ஒருவர் ஒரு படத்துக்கு ஆடிசன் நடக்குது வா என்று அழைத்தார். ஆடிசனுக்கு போய்விட்டு வந்தேன். நீ தான் ஹீரோ என்று சொல்விட்டார்கள். அதோடு அடுத்த அதிர்ச்சி ஆனந்திக்கு ஜோடியாக நடிக்கிறேன் என்றார்கள்.
என்னோட பெயர் பாண்டி, இப்போது அதை தமிழ் என்று மாற்றி உள்ளேன். என் தாய்மொழியின் பெயரை வைத்துக் கொண்டதில் எனக்கு பெருமை. நான் சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்க அப்பா விவசாயி. நான் இப்போ நம்பியிருக்கிறது தமிழ் நாட்டு மக்களைத்தான். என்னை உங்க வீட்டு பிள்ளையாக ஏற்றுக் கொண்டு ஆதரவு தாருங்கள். என்கிறார் பாண்டி சாரி...தமிழ்.