ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மத்திய அரசின் மாட்டிறைச்சி அறிவிப்பு எதிரும், புதிருமான கருத்துக்களை விதைத்துள்ளது. பலர் இதனை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். நடிகர் சித்தார்த் சமூக அக்கறை உள்ளவர். சென்னை மக்கள் வெள்ளத்தில் தவித்தபோது நேரடியாக களத்தில் இறங்கி உதவி செய்தவர். எந்த பிரச்சினையிலும் துணிச்சலாக கருத்து கூறுகிறவர். மாட்டிறைச்சி விவகாரத்தில் மக்களின் தனிப்பட்ட விருப்பத்தில் தலையிடாதீர்கள் என்று அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
இந்தியாவை முன்னேற்றுங்கள், மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள். இந்து தேச பிரச்சாரத்தை நிறுத்துங்கள். நாம் அதைவிட மேலானவர்கள். கால்நடைகள் கொல்வது பற்றியான விஷயம் தேவையற்றது. அது மக்களை கோபமடையத்தான் செய்கிறது. மாநில அரசு இந்த முடிவுக்கு இசைந்து கொடுத்தாலும், இல்லையென்றாலும், மத்திய அரசு இதிலிருந்து விலகியே இருக்க வேண்டும். நம்மில் பலர் பக்தாஸ் அல்ல. நாம் வெறும் இந்தியர்கள். வாழு, வாழவிடு. வெறுப்பை நிறுத்துங்கள். இவ்வாறு சித்தார்த் எழுதியுள்ளார்.