மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
செக் மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளருக்கு, ஜாமினில் வரக்கூடிய கைது வாரன்ட் பிறப்பித்து, சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளையைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு: என்னிடம் இருந்து மகேந்திர குமார் (சினிமா தயாரிப்பாளர்) என்பவர் ஐந்து கோடி ரூபாய் கடன் பெற்றார். கடந்த 2006ம் ஆண்டு டிசம்பரில் வாங்கியிருந்தார். ஒரு பகுதி பணத்தை திருப்பிச் செலுத்தும் வகையில், அதற்கான செக்கையும் அளித்தார். இந்தக் காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, அவைகள் திரும்பி வந்தன. இதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்பது நன்கு தெரிந்தும், இந்த செக்கை வழங்கியுள்ளார். மாற்றுமுறை ஆவண சட்டப்படி, மகேந்திரகுமாரை தண்டிக்க வேண்டும். நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில், மகேந்திர குமார் ஆஜராகாததால், அவருக்கு ஜாமினில் வரக்கூடிய கைது வாரன்ட் பிறப்பித்து, எழும்பூர் கோர்ட் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.