ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாடுமுழுக்க மாட்டிறைச்சி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் ஹீரோ இல்லை என்று கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி.
இறைச்சிக்காக மாடுகள் விற்பதை தடை செய்யவதாக சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருவதோடு போராட்ட களத்தில் மாட்டுக்கறியை சமைத்து, உண்ணும் போராட்டங்களும் நடந்து வருகின்றன. அதிலும் கேரளாவில் நடுரோட்டில் ஒரு மாட்டை வெட்டி சமைத்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமூகவலைதளமான டுவிட்டரில் மிகவும் ஆக்ட்டீவ்வாக இருக்கும் நடிகை கஸ்தூரி, மாட்டிறைச்சி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது... "மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் மிகவும் தவறானது. அது மற்றவர்களின் கோபத்தை ஏற்படுத்தியதால் தான் ஐஐடி மாணவர் தாக்கப்பட்டார். இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை விதித்ததை நான் எதிர்க்கிறேன். ஆனால் என்னுடைய உணவு முறை மற்றவர்களுக்கு இடையூறாக இருக்க கூடாது. மாட்டிறைச்சியை சாப்பிடுவதால் நீங்கள் ஹீரோ கிடையாது. முத்த போராட்டத்திற்கும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம், ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் இந்த போராட்டத்தை தவிர்த்திருக்கலாம்".
இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.