ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுவாதி கொலை வழக்கு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை டிஜிபி., அலுவலகத்தில் சுவாதியின் தந்தை புகார் அளித்துள்ளார். தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம் நுங்கம்பாக்கம் சுவாதி கொலை. சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி, கடந்த 2016 ஜூன், 24 காலை, 6:30 மணிக்கு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மர்ம நபரால் கொடூரமாக கொல்லப்பட்டார். இதுதொடர்பாக நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ராம்குமார், சிறையில் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். சுவாதி - ராம்குமார் சம்பவத்தில் இன்னும் விலக முடியாத பல மர்ம மூடிச்சுகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் விஜயகாந்த்தை வைத்து உளவுத்துறை என்ற படத்தை இயக்கிய எஸ்டி.ரமேஷ் செல்வன் என்பவர், சுவாதி கொலை சம்பவத்தை முழுநீள படமாக எடுத்துள்ளார். நேற்று முன்தினம் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக ராம்குமார் நெல்லையில் கைது செய்த போது போலீசாரே ராம்குமாரின் கழுத்தை பிளேடால் அறுப்பது போன்ற காட்சிகள் டிரைலரில் இருக்கின்றன. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், சுவாதி படத்திற்கு தடை விதிக்க கோரி சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் டிஜிபி.,யிடம் புகார் அளித்துள்ளார். அதில், சுவாதி திரைப்படத்தில் உண்மைக்கு புறம்பான விஷயங்கள் உள்ளன. இப்படம் வெளியானால் எங்கள் குடும்பத்தார் மன ரீதியாக அதிகம் பாதிக்கப்படுவர். ஆகையால் இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் எங்களிடம் எந்த முன் அனுமதியும் பெறாமல் இப்படத்தை எடுத்துள்ளனர். ஆகையால் இப்படத்தை எடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.