ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் கெளதம் கார்த்திக், சனா உள்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர், விக்ரம் இருவர் இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில்,
இந்த படத்தை இயக்கியுள்ள ராஜ்குமார் பெரியசாமி என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். உண்மையிலேயே அவர் திறமையானவர். என்னிடமிருந்து வெளியே போன பிறகும் நான் துப்பாக்கி, கத்தி படங்கள் பண்ணியபோது வடசென்னை வாய்ஸ் பேச அவரை கூப்பிட்டேன். ரொம்ப அழகாக பேசிக்கொடுத்தார். இரண்டு தயாரிப்பாளர்கள், ஒரு டைரக்டருக்கு வாய்ப்பு கொடுக்க சண்டை போட்டுக்கொண்டது எனக்கு தெரிந்து ராஜ்குமாரை தவிர வேறு யாருக்கும் நடந்திருக்காது என்று நினைக்கிறேன்.
காரணம், அவர் பண்ணிய ஸ்கிரிப்ட் அப்படி. அதனால் தான் நானும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் சேர்ந்து இந்த படத்தை தயாரித்துள்ளோம். இந்த படத்தை தயாரிக்க கிடைத்த வாய்ப்பினை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்த படத்திற்காக ரொம்பவே கடினமாக உழைத்திருக்கிறார் ராஜ்குமார். ஒரு குழந்தையை பெற்ற அளவுக்கு கஷ்டப்பட்டிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கும். ஒரு முதல் தர இயக்குனர் வரிசையில் கண்டிப்பாக ராஜ்குமார் வந்து நிற்பார் என அடித்து சொல்றேன்.
மேலும், இந்த ரங்கூன் படத்தில் நட்பு, லவ், பேமிலி செண்டிமென்ட் எல்லாமே உள்ளது. தங்கம் என்பதை அணிந்து கொள்ளும் ஆபரணமாகத்தான் நாம் பார்க்கிறோம். ஆனால், அந்த தங்கத்திற்கு பின்னாடி என்னென்னவெல்லாம் இருக்கிறது என்பதை அவர் ஆராய்ச்சி செய்து இந்த படத்தை பண்ணியிருக்கிறார். ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. வடசென்னை கதையில் எத்தனையோ படங்கள் வந்தாலும், இந்த படத்திற்க்காக இதுவரை பார்க்காத புதுசு புதுசான இடங்களை தேடிப்பிடித்து காட்சி பண்ணியிருக்கிறார்.
படத்தின் கதாநாயகன் கெளதம் கார்த்திக், எனக்கு பிடித்த இளம் நடிகர்களில் ஒருத்தர். அவர் ஒர்ஜினலாக இவ்ளோ கலரா இருப்பார் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் என்னை மாதிரி அவரும் கருப்பாகவே இருந்தார். ஊட்டியில் படித்த கெளதம் கார்த்திக், வடசென்னை தமிழ் பேசி சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் நாயகி சனா, சிம்ரன் நடித்த முதல் படத்தில் நான் உதவி இயக்குனராக ஒர்க் பண்ணினேன். அப்போது திரைக்குப்பின்னால் அவர் எப்படி இருந்தாரோ அப்படியே இந்த பட நாயகி சனா இருக்கிறார். தமிழில் சிம்ரன் விட்ட இடத்தை இவர் பிடிப்பார். நல்ல பர்பாமென்ஸ், நல்ல ஸ்மைல் உள்ளது.
எனக்கு இதுவரை கொடுத்து வருவது போன்று ராஜ்குமாருக்கும் மீடியாக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். அதற்கு அவர் ஒர்த்தான ஆள். சின்னத்திரையில் இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். இவர் கடினமாக உழைத்தால் தான் ஜெயிக்க முடியும், இவர் ஜெயித்தால் தான் மற்றவர்களுக்கு நம்பிக்கை வரும் என்றார்.