ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மோகன்ராஜா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வேலைக்காரன்'. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலேசியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.
இப்படத்தை முதலில் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடுவதாக அறிவித்தார்கள். அதன் பின், சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களில் படத்தை வெளியிடுகிறோம் என ஒரு மாதம் தள்ளிய வெளியீட்டுத் தேதியை அறிவித்தார்கள்.
இதனிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்க 100 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் 'ஸ்பைடர்' படத்தையும் சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
இதன் காரணமாக 'வேலைக்காரன்' படத்திற்கு கடும் போட்டி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தனி ஒருவனாக அந்த விடுமுறை நாட்களில் வெளிவந்து வசூலை அள்ளலாம் என நினைத்திருந்தவர்களுக்கு தற்போது 'ஸ்பைடர்' வெளியீடு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் என்பதால் 'ஸ்பைடர்' படத்தைத்தான் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் அதிகம் விரும்புவார்கள். தன்னை வைத்து 'மான் கராத்தே' படத்தைத் தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸுடன் போட்டி போட சிவகார்த்திகேயன் எப்படியும் விரும்ப மாட்டார். எனவே, மீண்டும் வினியோகஸ்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க 'வேலைக்காரன்' வெளியீட்டுத் தேதியை தள்ளி வைக்கிறோம் என்ற அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.