ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிந்தி திரைப்படங்களில் நடித்த, பழம்பெரும் நடிகை கீதா கபூரை அவரது மகன் மருத்துவமனையில் சேர்த்து விட்டு காணாமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த, 1972ம் ஆண்டு வெளியான, பகீஷா என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தவர், கீதா கபூர். ரசியா சுல்தான் உட்பட, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மும்பையில் உள்ள எஸ்.ஆர்.வி., மருத்துவமனையில், ரத்த அழுத்த குறைவு பாதிப்பு காரணமாக கீதா கபூரை அவரது மகன் ராஜா கடந்த மாதம் சேர்த்துள்ளார். மருத்துவமனையில் பணத்தை கட்டும்படி சொல்லிய போது ஏ.டி.எம்., சென்று பணம் எடுத்துக் கொண்டு வருவதாக கூறி சென்ற ராஜா அதன் பிறகு வரவேயில்லை. தற்போது மருத்துவமனை பில் மட்டும், 1.5லட்சம் ரூபாயை தாண்டி உள்ளது. துவக்கத்தில், கீதா கபூர் யார் என்பது மருத்துவமனை அதிகாரிகளுக்கு தெரியாது. பின்னர் விசாரித்த பிறகு தான் அவர் பழம்பெரும் நடிகை என தெரிய வந்தது.
நடிகை கதறல்
இதையடுத்து, போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தன் மகன் ஒரு மாதகாலமாக தன்னை அடித்து உதைத்ததாகவும், நான்கு நாட்களுக்கு ஒரு முறை சாப்பாடு போட்டதாகவும், அறையில் வைத்து பல நாட்கள் பூட்டியதாகவும் கீதா கபூர் கூறியுள்ளார். அவரது மகன் ராஜா திரைப்படத்துறையில் நடன பயிற்சியாளராக உள்ளார். அவரது மகள் பூஜா, விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். அவரது மகளுக்கு தகவல் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.