ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை செயல்பட்டு வருகிறது. சேம்பருக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அடுத்ததாக இன்னொரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதே வளாத்தில் தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடத்தின் மொட்டைமாடியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. தற்போது கட்டப்பட்டு வரும் இரண்டாவது கட்டடத்தில் தயாரிப்பாளர் சங்கதிற்கு 10 ஆயிரம் சதுர அடியில் கட்டடம் தருவாதாக சேம்பர் கூறியிருந்தது. ஆனால் தற்போது 3 ஆயிரம் அடி மட்டுமே தர முடியும் என்று கூறுவதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், பெப்சி தொழிலாளர் சங்கம், தயாரிப்பாளர்கள் கில்டு, இயக்குனர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேம்பர் அலுவலம் முன் திரண்டு திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தமிழ் சினிமா சங்கங்ளுக்கு 25 சதவிகித இடம் ஒதுக்கித் தரவேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.
தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலாளர்கள் ஞானவேல் ராஜா, கதிரேசன், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஆகியோர் இணைந்து 25 சதவிகித இடம் ஒதுக்கீடு கேட்டு மனு கொடுத்தனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாவது: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு இடம் கொடுத்தது தமிழ் தயாரிப்பாளர்கள். இன்று அது பலகோடி ரூபாய் மதிப்பில் உயர்ந்திருக்கிறது. ஆனால் தமிழ் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஏதோ பிச்சை போடுவது போல சிறிய அளவில் இடம் ஒதுக்குகிறார்கள். தமிழ் சினிமா தொடர்புடைய அனைத்து சங்கங்களும் ஒரே இடத்தில் இருந்தால் பணிகள் வேகமாக நடக்கும். மற்ற மாநிலகங்களில் அப்படித்தான் இருக்கிறது. அதனால் எல்லா சங்க அலுவலுகமும் ஒரே இடத்தில் அமைய வசதியாக தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் 25 சதவிகிதத்தை தமிழ் சினிமாவுக்கு தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம், தராவிட்டால் தொடர்ந்து போராடுவோம் என்றார்.