ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்த அவர் இப்போதுவரை டூயட் பாடும் கதாநாயகியாக மட்டுமே இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். முன்வரிசை நடிகை என்கிற பெயர் இல்லையென்றாலும், பேசப்படும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும், விஜய்சேதுபதியுடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான அவர், தற்போது விக்ரம், தனுஷ் படங்க ளில் நடித்து வருகிறார்.
இதில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். காக்கா முட்டை படத்தில் நடித்து வந்தபோதே தனுஷின் தயாரிப்பில் நடித்த எனக்கு அவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசை நிறையவே உள்ளது என்று கூறிவந்த ஐஸ்வர்யா ராஜேசுக்கு இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முக்கியாக, இந்த படத்தில் முதலில் சமந்தா பின்னர் அமலாபால் கமிட்டாகி இப்போது இவர் கமிட்டாகியிருக்கிறார்.
இந்த நிலையில், வடசென்னை படத்திற்காக சமந்தாவுக்கு கோடி சம்பளம் பேசியவர்கள் பின்னர் அமலாபாலுக்கு அதைவிட கொஞ்சம் கம்மியாக பேசியதாகவும், இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அமாலாபாலின் சம்பளத்தை விட கம்மியாக பேசியிருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷைக்கேட்டால், எனது வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத யாரோதான் இப்படி வதந்தி பரப்பி விட்டுள்ளனர் என்று கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், என்னைப்பற்றி இதற்கு முன்பும் சில வதந்திகள் பரவியது. இப்போது இந்த மாதிரி பரவியிருக்கிறது. ஆனால், இந்த வதந்திகள் எல்லாமே உண்மைக்கு புறம்பானவைதான். அதனால் இதை யாரும் உண்மை என்று நம்பவேண்டாம் என்கிறார்.