ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வேலு பிரபாகரன் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ஒரு இயக்குனரின் காதல் டைரி. இந்த படத்தில் நாயகியாக பொன் ஸ்வாதி நடித்துள்ளார். இளையராஜாஇசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. அப்போது இளையராஜா, எஸ்.தாணு, இயக்குனர் ஸ்டான்லி, பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் வரவேற்புரை ஆற்றிய டைரக்டர் வேலுபிரபாகரன், ரொம்ப நாள் கழிச்சு முழுக்க செத்துப்போயிட்டான் என்ற நிலைமையில் இருக்கிற ஒருவனின் முனங்கல்தான் இந்த படம். அவனுடைய முனங்கல் மக்களுக்கு கேட்கபோகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் இளையராஜா தான். அவரை நம்முடைய ஆதி விதையாக நான் பார்க்கிறேன். அவரிடம் மிகப்பெரிய நேர்மை இருக்கும். நான் பார்த்து நடிக்காத ஒரே மனிதன் இளையராஜாதான். எங்கேயும் யாரிடமும் அவர் நடித்ததில்லை என்று பேசினார்.
அதன்பிறகு பேசிய தயாரிப்பாளர் எஸ்.தாணு, ஒரு இயக்குனரின் காதல் டைரி படத்தை நான் பார்த்து மகிழ்ந்தேன். இந்த படத்தில் இளையராஜாவின் ஒரு பாடல் என்னை நெகிழ வைத்தது. அந்த பாடலில் இசையே இல்லாமல் பெண் குரலில் மட்டுமே பாட வைத்திருந்தார். அதைக்கேட்ட கண்கள் கசிந்தது. பின்னணி இசையே இல்லாமல் பாடலிலேயே கண்களில் கண்ணீரை வரவைத்து விட்டார் இளையராஜா. ஆயிரம் ஆஸ்கர் உங்கள் காலடியில் இருக்க வேண்டும்.
வடஇந்திய பாடல்கள் தென்னிந்தியாவில் ஒலித்து வந்த நிலையை மாற்றியவர் இளையராஜா. நான் தயாரித்த வண்ண வண்ண பூக்கள் படத்திற்கு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அது எரிந்து முடிவதற்குள் ஆறு பாடல்களுக்கான டியூன்களை ரெடி பண்ணினார் இளையராஜா. தயாரிப்பாளர் சங்கத்திற்கு நான் தலைவராகும்போது, எச்எம்வியிம் 300 கோடி கேட்கிறார். கிட்டத்தட்ட அவர்கள் 1000 கோடிக்கு மேல் சம்பாதித்திருக்கிறார்கள் என்றார். தயாரிப்பாளர்களுக்காக ஒரு கோடியை நீதிமன்றத்தில் கட்டி வழக்குப்போட்டு 28 லட்சம் ரூபாயை எங்களுக்கு வாங்கி கொடுக்கும்போது தயாரிப்பாளர்களின் கண்கள் கசிந்து விட்டது. அப்படி இசைக்கான உரிமைக்காக போராடினார் இளையராஜா என்றார்.
அதைத் தொடர்ந்து பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, ஒரு ராஜா சபையில் ஐயா ராஜா சாரைப்பற்றி பேசாமல் இருக்க முடியாது. எப்போதுமே படைப்புக்கும் படைப்பாளிக்குமிடையே இடைவெளி இருக்கக்கூடாது என்று நினைப்பவன் நான். படைப்புக்கு ஒரு முகமும், படைப்பாளனுக்கு ஒரு முகமுமாக இருக்கிறது. வேலு பிரபாகரனின் படம் என்றாலே அய்யய்யோ அவர் படமா என்கிறார்கள். நான் அவரது அடுத்த படத்தில் நடிப்பதாக இருக்கிறேன். அதைக்கேட்டு, அவர் படத்தில் நடிக்காதீர்கள் பெயர் கெட்டுப்போகும் என்கிறார்கள். அப்படி சொன்னவர்களிடம், ஏற்கனவே எனக்கு என்ன பெயர் இருக்க கெட்டுப்போவதற்கு என்று கூறினேன்.
என்னைப்பொறுத்தவரைக்கும் பொய் பேசுற உலகத்தில் உண்மை பேசுறவன் பைத்தியக்காரனாக இருக்கிறான். அந்தவகையில் தமிழிசை தொலைந்து விடுமோ என்கிற பயம் இருந்தது. இந்தி பாடல்களை விரட்டியடித்து தமிழர்களை தமிழ்ப்பாடல்களை கேட்க வைத்தவர் இளையராஜா.
அப்படிப்பட்ட அவர் பெயரை குறைந்த பட்சம் ஒரு சாலைக்கு வைத்திருக்க வேண்டுமல்லவா? ஒரு பள்ளிக்கூடமாவது திறந்திருக்க வேண்டுமல்லவா? வாழும்போது வாழும் கலைஞனுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் செத்த பிறகு பத்மபூஷன், பத்மவிபூஷன் எதற்கு? கொண்டு போய் அடுப்பங்கரையில் போட்டு எரியுங்கள். ஒருவரின் திறமையை அங்கீகரிப்பதில் இங்கே பஞ்சம் இருக்கிறது.
எவ்வளோ பெரிய உயரத்துல இருக்க வேண்டிய மனிதனை இப்படி ஓரங்கட்டி வைத்திருக்கிறார்களே என்ன காரணம்? இசை என்பது துளசி மாடத்தை சுற்றி கிடந்தது. இன்றைக்கு நாத்து வயலில் சுற்ற விட்டுட்டாரே இளையராஜா. யாருக்கு அந்த தைரியம் வரும். வெள்ளை தோலு மட்டுமே பாடிவந்த இடத்துல கறுப்பு தோலையும் பாட வச்சிருக்காருள்ள. இப்படிப்பட்ட இளையராஜாவைப்பற்றி விமர்சிக்க இங்கே யாருக்குமே தகுதியில்லை. அவர் ஒரு குழந்தை. வேலு பிரபாகரனை மேட்டர் படம் எடுக்கிறவரை பார்க்கிற மாதிரியே பார்க்கிறாங்க. அதுவும் சேர்த்துதான் வாழ்க்கை. அது இல்லாம வாழ முடியுமா? இந்த படத்தில் இளையராஜா-வேலுபிரபாகரன் என்ற இரண்டு புரட்சியாளர்கள் சேர்ந்து வேலை பார்த்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல படைப்பு என்று ஆவேசமாக பேசி முடித்தார்.
ஆனால் அதையடுத்து பேச இருந்த இளையராஜா இருக்கையில் அமர்ந்திருந்தபடியே, நாலு சாலைக்கு என் பேரு, பள்ளிக்கூடம் என் பேருல திறந்தாச்சுன்னா எல்லாம் சரியா போயிடுமா? என்று சினேகனைப்பார்த்து கேட்டவர், எதிரில் அமர்ந்திருந்த மக்களைப்பார்த்து, உங்க மனசுல, உங்க ரத்தத்துல, உங்க உயிருல, எப்பவும் நிரந்தரமா ஓடிக்கிட்டிருக்கேன் நான். உங்க மனசுல இருக்கிறது இளையராஜா என்ற உயிர் ஒன்றுதான்...என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்து எழுந்து போய்க்கொண்டேயிருந்தார்.