ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போதைய சூழலில் யாரும் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன், முதன்முறையாக சின்னத்திரையில் களமிறங்கியுள்ளார். வடமாநில சேனல்களில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் விஜய்டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. இதை கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதுதொடர்பான பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிகழ்ச்சி குறித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கமல். பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விக்கு அசராமல் பதிலளித்தார் கமல். அப்போது அவர் பேசியதாவது...
நான் 21 வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டேன். நீங்கள் நினைக்கும் போட்டி போடும் அரசியல் அல்ல, ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கும் அரசியல். நான் இந்தியனாக நடித்திருக்கிறேன், இந்தியனாகவே வாழ்ந்தும் கொண்டு இருக்கிறேன். ஒரு குடிமகனாக நாட்டுக்கு முறையாக வரியும் செலுத்தி வருகிறேன்.
தற்போதைய சூழலில் யாரும் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்பது கருத்து. இதில் நடிகர்களை மட்டும் சேர்க்க வேண்டாம், அனைவரையும் தான் சொல்கிறேன். பகுத்தறிவு உள்ள யாரும் அரசியலுக்கு வராமல் இப்பது நல்லது. அதேசமயம், தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். காந்தி, போஸ் என்ற பெயரில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல மாநிலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்க ஊரில் கூட போஸ் என்ற பெயரில் நிறைய பேர் உள்ளார்கள். கேரள மக்கள் என்னை மலையாளியாக பார்க்கிறார்கள்.
அரசியல் என்பது சம்பாதிக்கும் தொழில் அல்ல என அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், சேவை செய்யும் தொழிலாக பார்க்க வேண்டும். ரஜினியின் கருத்து தவறும் இல்லை, வித்தியாசமானதும் இல்லை. நான் போட்டி அரசியலில் இல்லை, அரசியல் தெரிந்திருந்தால் நானும் எப்போதோ அரசியலுக்கு வந்திருப்பேன்.
இவ்வாறு கமல் கூறினார்.