ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஊட்டி: தங்களுக்கு எதிரான, ஜாமினில் வெளிவர முடியாத, பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அலறிய நடிகர்கள் சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் எட்டு பேர், அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஊட்டி கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த, 2009ல் அக்., 2ல் நடிகை புவனேஸ்வரி, விபசார வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான செய்தி, நமது நாளிதழில் வெளியானது.
விமர்சனம் : இதைத் தொடர்ந்து, சென்னையில் நடந்த தென்னிந்திய நடிகர்கள் சங்க கூட்டத்தில், சூர்யா, சரத்குமார், சத்யராஜ், இயக்குனர் சேரன், காமெடி நடிகர் விவேக், அருண் விஜயகுமார், விஜயகுமார், ஸ்ரீபிரியா ஆகியோர், பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்தனர்.
இது தொடர்பாக, பத்திரிகையாளர் ரிசோரியா மரிய சூசை, ஊட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நடிகர்கள் எட்டு பேர் மீதும் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். வழக்கு ஊட்டியில் நடந்தபோது, நடிகர்கள் யாரும் ஆஜராகவில்லை.நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, ஊட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்குமார் ராஜவேல், குற்றம் சாட்டப்பட்ட நடிகர்கள் எட்டு பேர் மீதும், பிணையில் வெளிவர முடியாத, பிடிவாரன்ட் பிறப்பித்தார். இந்த உத்தரவு தொடர்பாக, ஊட்டி போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்தால், நடிகர்களை உடனே கைது செய்யும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
மனு தாக்கல் : வழக்கில் ஆஜரான வக்கீல் விஜயன் கூறுகையில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, ஊட்டி பி1 காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டதால், உடனடியாக நடிகர்களை கைது செய்ய வாய்ப்புள்ளது. அதே வேளையில், நடிகர்களும் உயர்நீதிமன்றத்தில், அவர்கள் சார்பில் ஏற்கனவே போடப்பட்ட, மனுவை திரும்ப எடுத்து விசாரிக்கும்படி மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. எனினும், பிடிவாரன்ட் என்பதால், அவர்கள் ஊட்டிக்கு வந்தாக வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது, என்றார்.
ஊட்டி டி.எஸ்.பி., மணிகண்டன் நேற்று காலை கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை எங்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. வந்த பிறகுதான் அது பற்றி கூறமுடியும், என்றார்.
இந்த வழக்கில், வக்கீல்கள் செந்தில்குமார், பிச்சையம்மாள் ராஜகோபால் ஆகியோரும் ஆஜராகி வருகின்றனர். இதற்கிடையே, ஊட்டி வக்கீல் விஸ்வநாதன், நடிகர்கள் எட்டு பேர் சார்பிலும், ஊட்டி கோர்ட்டில் பிடிவாரன்டை ரத்து செய்யக் கோரி, நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.