ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள படம் சரவணன் இருக்க பயமேன். எழில் இயக்கத்தில் உதயநிதி, ரெஜினா, சூரி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மே 12-ந்தேதி வெளியான இந்த படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,
நான் நடித்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி பெரிய ஹிட்டாக அமைந்தது. அதன்பிறகு கதிர்வேலனின் காதல் ஒரு டீசன்டான வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு நான் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றாலும் நான் தப்பான படங்களில் நடிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன். அதையடுத்து கமர்சியல் கதையில் பி அண்ட் சி வரை ரீச்சாகும் ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போதுதான் டைரக்டர் எழில், சரவணன் இருக்க பயமேன் கதையை சொன்னார். எதிர்பார்த்தபடியே இந்த படம் வெற்றி பெற்றுள்ளது. அதற்குள் அவர் அடுத்த படத்துக்கான கதையை ரெடி பண்ணி விட்டார். ஒரு ரெண்டு மூன்று படம் பண்ணிவிட்டு வருவதாக சொல்லியிருக்கிறேன்.
மேலும், பாகுபலி-2 ஒரு சுனாமி மாதிரி அடிச்சிட்டு போய்விட்டது. அந்த படம் வெளியாகியிருந்த நேரத்தில் என் படத்தை வெளியிடலாமா? வேண்டாமா? தியேட்டர்கள் கிடைக்குமா? என்றொரு டவுட் இருந்தது. ஆனால் விநியோகஸ்தர்கள் நம்பிக்கை கொடுத்தனர். அதனால் தைரியமாக படத்தை வெளியிட்டோம். எனது முதல் படமான ஓகே ஓகே படத்தில் வேணாம் மச்சான் வேணாம் பாடல் எப்படி ஹிட்டாக அமைந்ததோ, அதேப்போல் இந்த படத்தில் டி.இமான் இசையில் உருவான லாலா கடை சாந்தி, எம்புட்டு இருக்கு ஆசை என்ற இரண்டு பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுத்தன. மூன்றாவது வாரமும் 80 திரைகளில் சரவணன் இருக்க பயமேன் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார்.