ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான பாகுபலி 2 படம் 1500 கோடி ரூபாய் வசூலைக் கடந்து இந்தியாவிலேயே அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. வழக்கமாக இந்தியப் படங்கள் வெளியிடப்படும் நாடுகளில் மட்டுமே இந்தப் படம் வெளியாகியுள்ளது. இன்னும் இந்தப் படம் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் திரையிடப்பட வேண்டும். மேலும் சர்வதேச அளவில் படத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் திரைப்பட விழாக்களில் படத்தைத் திரையிட வேண்டும். அப்போதுதான் சர்வதேச திரைப்பட வினியோகஸ்தர்களைக் கவர முடியும்.
அந்த விதத்தில் பாகுபலி 2 படத்தைத் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று இரவு திரையிட உள்ளார்கள். நேற்று பாகுபலி படத்தின் முதல் பாகத்தைத் திரையிட்டுள்ளார்கள். இதன் மூலம் சர்வதேச அளவில் உள்ள திரையுலகத்தினரும் இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க முடியும். கேன்ஸ் விழாவில் இடம் பெற்றுள்ள இப்படத்தின் விளம்பரங்களில் யுஎஸ் பாக்ஸ் ஆபிசில் இந்தப் படம் வசூலித்த 155 மில்லியன் என்றே விளம்பரப்படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் சர்வதேச வினியோகஸ்தர்களை இந்தப் படம் கவர வாய்ப்புள்ளது.