ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்து விட்டு மார்க்கெட்டை பிடிக்க முடியாமல் தெலுங்கிற்கு திரும்பிச் சென்றவர் ராகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவிற்கு அவர் போன நேரம் சமந்தா தமிழில் பிசியாக இருந்ததால் அவருக்கான புதிய படங்களை வேகவேகமாக கைப்பற்றி தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார் ராகுல் ப்ரீத் சிங். இப்போது அவரது கால்சீட்டுக்காக முன்னணி தெலுங்கு ஹீரோக்களே காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மேலும், தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் ஸ்பைடர் படத்தில் நடித்திருப்பவர், கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்து வருகிறார். இந்தநிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்தியில் யாரியன் என்ற படத்தில் நடித்துள்ளேன். எனக்கு அதிகம் பிடித்த இந்தி நடிகர் யார் என்றால் அது ரன்வீர் சிங்தான். அவரது நடிப்புக்கு நான் பெரிய ரசிகை. அதனால் அவருடன் நடிக்கும் இந்திப்பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். முக்கியமாக, அவருடன் டேட்டிங் செல்லவும் தான் ஆசைப்படுவதாக கூறியுள்ளார் ராகுல் ப்ரீத் சிங்.