ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை வனிதாவும், அவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜும் விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்கிறார்கள். ஆனந்தராஜ் தன் மகளுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். வனிதா தன் குழந்தையை கடத்திச் சென்றுவிட்டதாக ஆனந்தராஜ் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக வனிதாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:
குழந்தையை கடத்தியதாக போலீசில் பொய்யான புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனந்தராஜை நான் விவாகரத்து செய்தபோது குழந்தையை, திங்கள் முதல் வியாழன் வரை அவர் பார்த்துக்கொள்வது எனவும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நான் பார்த்துக்கொள்வது என்றும் முடிவானது. ஆனால் 3 வருடத்துக்கு பின் திடீரென ஆனந்தராஜ், என்னிடம் தெரிவிக்காமல் குழந்தையை அழைத்துக் கொண்டு ஐதராபாத் சென்றுவிட்டார். வீட்டு முகவரி, செல்போன் எண் விவரங்களையும் தெரிவிக்கவில்லை. குழந்தையை பார்க்க முடியாமல் தவித்தேன். என் மகள் ஜெயனிதா என்னிடம் பேசினாள். எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை. பயமாக இருக்கிறது என்னை எப்படியாவது காப்பாற்றி அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாள்..
இதனால் உடனடியாக ஐதராபாத் சென்று அல்வால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து விட்டு போலீசுடன் சென்று குழந்தையை என்னுடன் அழைத்து வந்து விட்டேன். எனது மகள் என்னுடன் விரும்பி வந்ததை கடத்தல் என்று எப்படி சொல்ல முடியும்.? என்னை கைது செய்தாலும் கவலை இல்லை. குழந்தையை ஆனந்தராஜிடம் ஒப்படைக்க மாட்டேன். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி குழந்தையை மீட்பேன். என்கிறார் வனிதா.