ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி 2' படம் எவ்வளவு பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்று வருகிறது என்பதைப் பற்றி இதற்குமேல் சொல்லித்தான் மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதில்லை. 'பாகுபலி' படத்தின் முதல் பாகமும் பெரிய வெற்றியைப் பெற்று 700 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியது. இரண்டு பாகங்களிலும் பல விஷயங்கள் பிரமாதமாகப் பேசப்பட்டன. அவற்றில் படத்தின் இசையும் ஒன்று. படத்தின் இயக்குனர் ராஜமௌலியின் உறவினரான பிரபல இசையமைப்பாளர் கீரவாணி என்கிற மரகதமணி தான் இரண்டு பாகங்களுக்கும் இசையமைத்திருந்தார்.
தெலுங்கில் நேரடியாக எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஆனால், 'பாகுபலி 2' படத்தின் மலையாளப் பதிப்பில் பாடுவதற்கு பிரபல பாலிவுட் பாடகி மறுத்துவிட்டார் என்ற தகவலை இசையமைப்பாளர் கீரவாணி இப்போது வெளியிட்டுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு 'பாகுபலி 2' பற்றி ஹிந்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளிலும் மிகப் பெரும் படம் என ராம்கோபால் வர்மா பதிவிட்டதற்குப் பதிலளித்த கீரவாணி, “இது உண்மை என்றால், பிரபலமான ஹிந்தி பாட(கி)கர் மலையாளத்தில் பாட அழைத்த போது அதை அவமானமாகவும், எரிச்சலாகவும் கருதியது எனக்கு ஆச்சரியமளிக்கிறது,” எனக் கூறியுள்ளார்.
அவர் ஆங்கிலத்தில் 'சிங்கர்' என குறிப்பிட்டுள்ளதால் அது பாடகரா அல்லது பாடகியா என்பது தெரியவில்லை. மேலும் அவர் யார் என்றும் பெயரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். படம் வெளியான இத்தனை நாட்களுக்குப் பிறகு இது பற்றி கீரவாணி கூறியிருப்பதும் ஆச்சரியமானதுதான்.