ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டில் இன்றைக்கு ஹாட்-டாப்பிக்காக இருப்பவர் ரஜினி தான். அரசியல் பற்றி அவர் பேசும் பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார் நடிகர் ரஜினி. இன்று (மே 19), கடைசிநாளிலும் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். முன்னதாக ரசிகர்களிடம் ரஜினி பேசினார். அப்போது அவர் பேசிய பேச்சுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவிலான அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது இருக்கிறது. ரஜினி பேசிய விபரம் வருமாறு...
அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம்
நான் எது பேசினாலும் அது சர்ச்சை ஆகிறது. இல்லாவிட்டால் விவாதம் ஆகிறது. எதிர்ப்பு இல்லாமல் வளர முடியாது. அதிலும் அரசியலில் எதிர்ப்பு இல்லாமல் இருக்காது. அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். ரசிகர்கள் மத்தியில் நான் பேசியது சமூகவலைதளங்களில் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சனங்கள் வருவது வருத்தம் அளிக்கிறது.
நான் பச்சை தமிழன்
ரஜினி, தமிழரா என்ற கேள்வி எழுகிறது. நான் 24 வருடங்கள் தான் கர்நாடகாவில் இருந்தேன். கடந்த 44 வருடங்களாக உங்களுடன் தான் இருக்கிறேன். எனக்கு பெயர், புகழ், பணம் அள்ளிக் கொடுத்து, என்னை தமிழனாக்கியது ரசிகர்கள் தான். நான் இப்போது பச்சை தமிழன். என்னை நீங்கள் தூக்கி எறிந்தாலும் இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர, வேறு எந்த மாநிலத்திலும் போய் விழ மாட்டேன்.
நான் அரசியலுக்கு வரக்கூடாதா?
என்னை வாழ வைத்த தமிழ் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைக்க கூடாதா? அதற்காக நான் அரசியலுக்கு வர கூடாதா? அதற்காக வேறு யாரும் இல்லையா? என கேட்கிறார்கள், இருக்கிறார்கள். ஸ்டாலின் நல்ல திறமையானவர், அன்புமணி நல்ல கல்வியாளர், உலகம் முழுவதும் சுற்றி வந்தவர். திருமாவளவன் தலித்துகளுக்காக போராடக் கூடியவர். சீமான் நல்ல போராளி.
அரசியல் மாற்றம் வேண்டும்
ஆனால் தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் நன்றாக இல்லை. அதனை சரி செய்ய மக்கள் சிந்தனையில் மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் அனைவரும் இணைந்து தான் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும். தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தால் சர்ச்சையாகிறது என்பதற்காக தான் பேசுவதை தவிர்க்கிறேன்.
போர் வரும்போது பார்த்து கொள்ளலாம்
இந்த விமர்சனங்கள் அனைத்தும் செடி வளர போடப்படும் உரம், மண்ணாக தான் பார்க்கிறேன். நம்மை எதிர்த்து நாம் வளர சிலர் உதவிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கென தனிப்பட்ட கடமைகள், வேலைகள், தொழில் உள்ளது. உங்களுக்கும் குடும்பம், பொறுப்புக்கள் உள்ளது. அதனால் பொறுமையாக இருங்கள், போர் வரும் அப்போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை பொறுமையாக இருங்கள்.
இவ்வாறு ரஜினி பேசினார்.