சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஒரு கதாசிரியர் தனது கதையை திருடிவிட்டதாக இயக்குனர், தயாரிப்பாளர் அவ்வளவு ஏன் ஒரு கதாநாயகன் மீது கூட பழிபோட்ட நிகழ்வுகளை நிறையவே பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது பாலிவுட்டில் நடக்கு விவகாரம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பாலிவுட் திரையுலகத்திற்கே புதிய விஷயம் தான்.. ஆம்.. கங்கனா ரணாவத் நடித்துள்ள 'சிம்ரன்' படத்தின் கதாசிரியர் அபூர்வா அஸ்ராணி, தனது கதையை சொந்தம் கொண்டாடுவதாக நாயகி 'கங்கனாவின் மீது குற்றம் சாட்டியுள்ளார்..
நன்றாக கவனியுங்கள்.. கதையை திருடிவிட்டதாக அவர் சொல்லவில்லை.. தனது கடின உழைப்பை அவர் சொந்தம் கொண்டாடுவதாகத்தான் குற்றம் சாட்டியுள்ளார்.. ஆரம்பத்தில் இருந்தே பல பேட்டிகளின்போது இந்தப்படத்தின் கதையை தானே எழுதியதாக கங்கனா சொல்லி வந்தார்.. இதை படத்தின் இயக்குனர் ஹன்ஷால் மேத்தாவும் எந்த இடத்திலும் மறுக்கவும் இல்லை.
இதை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் வெளியான 'சிம்ரன்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கதைவசனம் என கங்கனாவுக்கு முதலில் பெயர் போடப்பட்டு, அதை தொடர்ந்தே படத்தின் கதை வசனத்தை எழுதிய அபூர்வா அஸ்ரானியின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு நாயகி கதையை தானே எழுதியாக இன்னொருவரின் கதையை சொந்தம் கொண்டாடுவது கொஞ்சம் புதுமையாகத்தான் இருக்கிறது.