பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருவாரா... மாட்டாரா.... என்று கேள்வி தான் தமிழ்நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, முதல்நாள் சந்திப்பின் போது அரசியல் பற்றிய தனது கருத்தினை முன் வைத்தார். வழக்கம் போல் தான் அரசியலில் களமிறங்குவேன் என்று நேரடியாக சொல்லவில்லை.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பேச்சை வைத்து பா.ஜ., காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் ரஜினியை தங்களது கட்சிக்கு வர வேண்டும் என்று அழைத்து வருகின்றனர். இதுதொடர்பாக வலைதளங்களில் ஒரு பெரிய விவாதமே போய் கொண்டு இருக்கிறது. பலரும் அவர் வருவதை வரவேற்றும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் வெளுத்து வாங்கியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... தென்னிந்திய மக்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால் சினிமாக்காரர்களை இப்படி அவர்கள் கொண்டாடுவது முட்டாள்தனமாக இருக்கிறது. நான், சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்தபோது சில தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி நடித்த படம் ஒன்றை தியேட்டரில் பார்க்க சென்றேன். அப்போது அவர் திரையில் தோன்றிய போது ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு இன்றும் என் நினைவில் இருக்கிறது. அதேப்போன்று இப்போது தென்னிந்தியர்கள் ரஜினி மீது பைத்தியமாக உள்ளார்கள். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ரஜினி அரசியலுக்கு வர அவரிடம் என்ன இருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய பிரச்னைகளாக இருக்கும் வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்துகுறைபாடு, சுகாதார பிரச்னை, விவசாயிகளின் துயரங்கள் போன்றவற்றை தீர்ப்பதற்கு அவரிடம் ஏதாவது விஷயங்கள் உள்ளதா...? ஒரு விஷயமும் அவரிடம் இல்லை. பின்னர் எதற்காக ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அமிதாப்பச்சனை போன்று ரஜினிக்கும் தலையில் ஒன்றும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.