சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
89 படங்களைத் தயாரித்து தமிழ்த் திரையுலகில் சுமார் 30 ஆண்டு காலமாக முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது சூப்பர் குட் நிறுவனம். அந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரியின் இளைய மகன் ஜீவா, 2003ம் ஆண்டு வெளிவந்த 'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்த 14 வருடங்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில வெற்றிப் படங்களில் மட்டுமே ஜீவா நடித்துள்ளார்.
“ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ, நண்பன்' ஆகிய படங்கள் மட்டுமே ஜீவாவின் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. 14 வருடங்களில் அவர் அதிகப் படங்களிலும் நடிக்கவில்லை. மிகவும் தேர்ந்தெடுத்தே நடிக்கிறார். இருந்தாலும் அவர் கடைசியாக நடித்து வெளிவந்த “யான், போக்கிரி ராஜா, திருநாள், கவலை வேண்டாம்” ஆகிய நான்கு படங்களும் தொடர் தோல்விப் படங்களாக அமைந்தது.
மீண்டும் நல்லதொரு வெற்றிக்காகக் காத்திருக்கும் ஜீவா நாயகனாக நடித்துள்ள 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படம் நாளை மறுநாள் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படமாவது ஜீவாவிற்கு வெற்றிக் கதகவைத் தொறக்கட்டும்.