ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை கோடம்பாக்கத்திலுள்ள தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இன்று மூன்றாவது நாளாக ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து வருகிறார் ரஜினி. இந்த நிலையில் முதல் நாளன்று ரசிகர்கள் முன்பு பேசிய அவர், அரசியல் குறித்தும் சில விசயங்களை பேசினார். அவர் நேரடியாக அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லவில்லை. என்றாலும், நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்கும் நோக்கம் உள்ளவர்கள் யாரையும் என்னுடன் சேர்க்க மாட்டேன். அதனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமுள்ளவர்கள் இப்போதே என்னை விட்டு விலகி விடலாம் என்று ஓப்பனாக பேசினார்.
அதையடுத்து, ரஜினியின் பேச்சு குறித்து பலதரப்பட்ட கருத்துக்களை பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நடிகர் மாதவன் நேற்று அளித்த பேட்டியில், தமிழக மக்களை அத்தனை எளிதில் யாரும் ஏமாற்றி விட முடியாது. ஒருவரை அவர்களுக்கு பிடித்து விட்டால் முழு ஆதரவு கொடுத்து விடுவார்கள். அந்த வகையில் ரஜினியை தமிழ் மக்களுக்கு பிடித்திருக்கிறது. அதனால் அவர் அரசியலுக்கு வர வேண்டும். பொறுப்பானவர். தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அவர் அரசியலுக்கு வந்தால் நாடும், மக்களும் நன்றாக இருப்பார்கள் என்றார் மாதவன்.