சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சீனுராமசாமி ஒவ்வொரு படத்தை இயக்கும்போதும் அடுத்தப் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி இல்லை, வேறு ஹீரோதான் என்று சொல்வார். ஆனால் சூழ்நிலை மீண்டும் அவரை விஜய் சேதுபதியிடம் கொண்டுபோய் நிறுத்திவிடும்.
தென்மேற்கு பருவாக்காற்று படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷாலை வைத்து நீர்ப்பறவை படத்தை இயக்கினார். அந்தப் படம் பேசப்பட்ட அளவுக்கு வசூலை அள்ளவில்லை. எனவே பட வாய்ப்பு இல்லாமல்போனதால் வேறு வழியில்லாமல் விஜய்சேதுபதியிடம் போனார். அவரும் உடனடியாக கால்ஷீட் கொடுத்தார். லிங்குசாமியின் தயாரிப்பில் உருவான இடம் பொருள் ஏவல் என்ற அந்தப் படம் ஒருகட்டத்தில் முடங்கிப்போனது. இதனால் மனதளவில் உடைந்துபோன சீனுராமசாமியை மீண்டும் அழைத்து 'தர்மதுரை' படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். தர்மதுரை படம் வெற்றிப்படமாக அமைந்தது. மம்முட்டியை வைத்து அடுத்தப்படம் இயக்கப்போவதாக சொன்னதும் நிறைவேறவில்லை.
இந்நிலையில் சீனுராமசாமி மீண்டும் சென்ற இடம் விஜய் சேதுபதிதான். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க, சீனுராமசாமி இயக்கவிருக்கும் படத்திற்கு 'மாமனிதன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படம் கற்பனை கதையில்லையாம். தென் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம்.
ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துவிட்டு இப்போது விஜய்சேதுபதி தவிர்த்து மற்ற கேரக்டர்களுக்கான நடிகர் நடிகைகள் தேர்வை செய்து வருகிறாராம் சீனுராமசாமி! ஓரிரு மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. படம் வெளியாகும் வரை அந்த பிரபல மனிதரின் பெயரை சொல்லமாட்டாராம்.
கவலைப்படாதீங்க மீடியா கண்டுபிடிச்சுடும்.