ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருட்டு விசிடி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரையுலகினர் வருகிற 30ந் தேதி வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறார்கள். படப்பிடிப்பு பணிகள் முதல் தியேட்டர்கள் வரை அனைத்தும் மூடப்படுகிறது. ஆனால் இந்த போராட்டத்திற்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணி கூறியிருப்பதாவது:
கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் சினிமாவை நம்பியும், 25 ஆயிரம் பேர் தியேட்டர்களை நம்பியும் வாழ்க்கை நடத்துகின்றனர். ஸ்டிரைக் நடத்தினால், இவர்கள் அனைவருமே பாதிக்கப்படுவர். இன்னொன்று, நடிகர்கள் அதிக சம்பளம் வாங்காமல் இருந்தால், டிக்கெட் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள 169 தியேட்டர்கள் எக்காரணம் கொண்டும் மூடப்பட மாட்டாது. அவை தொடர்ந்து இயங்கும்” என தெரிவித்துள்ளார். இதே போன்று மற்ற பகுதிகளில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.