ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூர்யா நடித்த சிங்கம்-3 படத்தில் வில்லனாக நடித்தவர் அனூப் தாகூர் சிங்.அதன்பிறகு தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் வில்லனாக நடித்து வந்த அவர், தற்போது தெலுங்கு-கன்னடத்தில் தயாராகும் உதகர்சனா என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த இருமொழிப்படத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். நாயகியாக நம்ம ஊர் சாய் தன்ஷிகா ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பது பற்றி சாய்தன்ஷிகா கூறுகையில், உதகர்சனா படத்தை சுனில்குமார் தேசாய் இயக்குகிறார். இந்த படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகிறது. இந்த படத்தில் மாடர்ன் ஹீரோயினாக நடிக்கிறேன். இதற்கு முன்பு சில படங்களில் அப்படி நடித்திருந்தபோதும், தெலுங்கு, கன்னட ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு அந்த படத்தில் அதிரடி கமர்சியல் நாயகியாக உருவெடுக்கிறேன். ஆக, தெலுங்கு, கன்னடத்தில் நான் அறிமுகமாகும் இந்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுவேன் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் சாய் தன்ஷிகா.