ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இறுதிச்சுற்று படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் சுதா கொங்கரா. தற்போது தெலுங்கில் இறுதிசுற்றான குருவையும் முடித்து விட்டார். தற்போது அடுத்த தமிழ் படத்திற்கான வேலைகளை துவங்கி உள்ளார். அடுத்து சுதா இயக்கப்போகும் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திகில் படம். இதில் விஜய்சேதுபதி நடிக்கலாம் என்று தெரிகிறது. இதுபற்றி சுதா கொங்கரா கூறியதாவது:
அடுத்த படம் இதுதான், இப்படித்தான் என்று நான் திட்டமிடுவதில்லை. திடீரென்று ஒரு விஷயம் மனதை பாதிக்கும் அதைநோக்கி எனது அடுத்த படம் நகரும். வடநாட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் குத்துச்சண்டை வேதனை பற்றி அளித்த பேட்டியை படித்த பிறகுதான் இறுதிச்சுற்று படத்தை இயக்கினேன். அதற்கு முன் குத்துச்சண்டை பற்றி ஒரு படம் இயக்குவோம் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை.
இப்போது சமீபத்தில் பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி என் மனதை மிகவும் பாதித்தது. அந்த சம்பவத்தை நோக்கி அடுத்த படத்தை நகர்த்தியிருக்கிறேன். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திகில் படமாக அதனை உருவாக்கி வருகிறேன். தற்போது ஸ்கிரிப்ட் உருவாக்கத்தில் இருக்கிறேன். மற்றபடி நடிகர், நடிகைகள் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார் சுதா.