ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஒரு மாபெரும் வெற்றி, திரையுலகத்தில் மட்டுமல்ல வேறு எந்தத் துறைகளிலும் வாழ்க்கையை மாற்றிவிடும். ஐந்து வருடங்களாக வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்காக மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பிரபாஸ். அந்த ஒரு தியாகத்திற்காகவே அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்து, 1000 கோடி கிளப்பின் முதல் நாயகன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் என அவருடைய ரசிகர்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே, பிரபாஸை தங்களது படங்களில் நடிக்க வைக்க தெலுங்கு, ஹிந்தித் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். பிரபாஸ் தற்போது 'சாஹோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டுதான் வெளிவர உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க பலரும் முயற்சித்து வருகிறார்களாம்.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களையும் ஹிந்தியில் வெளியிட்டு படத்தை அதிகமாகப் பிரபலப்படுத்தி, பல கோடி வசூலைப் பெற காரணமாக இருந்தவர் கரண் ஜோஹர். அவருடைய தயாரிப்பில் பிரபாஸ் இரண்டு படங்களில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகி உள்ளதாம். 'பாகுபலி' படங்களின் மூலம் இந்தியாவிலும், உலக அளவிலும் பிரபாஸுக்குக் கிடைத்திருக்கும் புகழும், ஆக்ஷன் படங்களில் அவருடைய பொருத்தமான நடிப்பும், கரண் ஜோஹரை வெகுவாகக் கவர்ந்துள்ளதே இதற்குக் காரணம் என்கிறார்கள். இதன் மூலம் பாலிவுட்டிலும் பிரபாஸ் நேரடியாக நடிக்கும் வாய்ப்புகள் உருவாகும்.