ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஜோக்கர் படத்திற்கு விருது வாங்கியது ரொம்ப நல்ல அனுபவம் என்கிறார் அப்பட இயக்குனர் ராஜூமுருகன். அவர் மேலும் கூறுகையில், ஜோக்கர் படத்தில் மக்கள் ஜனாதிபதி என்ற கேரக்டரை மையமாக வைத்துதான் கதை யோட்டம் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு படத்திற்கு நிஜ ஜனாதிபதியிடமே விருது வாங்கியது சிறந்த அனுபவமாக இருந்தது. பொதுவாக விருதுகள் என்பதை ஒரு படைப்பிற்கான அளவீடாகவோ மதிப்பீடாகவோ நான் நினைப்பதில்லை. எத்தனையோ நல்ல படைப்புகளுக்கு விருதுகள் கிடைக்காமலேயே போயிருக்கிறது.
சார்லின் சாப்ளினே 70 வயதுக்கு பிறகுதான் ஆஸ்கர் வாங்கினார். உதிரிப்பூக்களுக்கு விருது கிடைத்துள்ளதா என்பது இன்று வரை தெரியவில்லை. அந்தவகையில், விருதுகள் என்பது ஒரு அளவீடோ மதிப்பீடோ கிடையாது. ஆனால் விருதுகள் ஏற்படுத்தக்கூடிய நம்பிக்கை என்பதை மிக முக்கியமான விசயமாக நான் பார்க்கிறேன். அது நம்முடைய சக மனிதர்களுக்கும், சக படைப்பாளிகளுக்கும் நம்மை பின்தொடரும் தோழர்களுக்கும் கொடுக்கக்கூடிய நம்பிக்கை என்பதுதான் முக்கியமான விசயம்.
அதோடு விருது வாங்கப்போகும்போது அங்கு வேற்று மொழி கலைஞர்களை சந்திப்பது, அவர்களுடன் உரையாடுவது நம்மை அடுத்த தளத்துக்கு எடுத்துக்கொண்டு செல்லும் என்பதை ஜோக்கர் படத்திற்கு விருது வாங்க சென்றபோது நான் உணர்ந்தேன் என்கிறார் இயக்குனர் ராஜூமுருகன்.