ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
25 வருடங்களை திரையுலகில் கடந்த ஏ.ஆர்.ரகுமான் லீ மஸ்க் என்ற படத்தை விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில், தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். இதுவரை இசையமைப்பாளராக ஹாலிவுட் வரை சென்ற ரகுமான் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் பற்றியும், தன்னுடைய இயக்கம் பற்றியும் ரகுமான் மனம் திறந்து பேசியுள்ளார்.
“25 வருடங்களுக்கு முன்பு ரோஜா படத்தில் அறிமுகமாகும் போது எந்த உணர்வில் இருந்தேனோ, இப்போதும் அப்படியேதான் இருக்கிறேன். அப்போது மணிரத்னமும், என்னுடைய குடும்பத்தினர் மட்டும்தான் ஆதரவாக இருந்தனர். ஆனால், இப்போது பலருடைய ஆதரவு இருக்கிறது.
இந்தப் படம் ஒரு பரிசோதனை முயற்சி, படம் பற்றிய கருத்துக்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு புதிய டெக்னாலஜி, படத்தில் என்ன இருக்கிறது என்பதை விட இந்த வி.ஆர் டெக்னாலஜியை மக்கள் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்பதில்தான் எனது எண்ணம் இருக்கிறது,” எனக் கூறியுள்ளார்.
பாகுபலி 2 படம் பற்றிய கேள்விக்கு, “அப்படி பிரம்மாண்டமாகப் படமெடுக்க இங்கு பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். மேலும், என்னிடம் 200 கோடி பட்ஜெட் எல்லாம் இல்லை,” என பதிலளித்திருக்கிறார்.
ரகுமான் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள இந்தப் படம் முற்றிலும் ரோம் நகரில் உருவாக்கப்பட்டுள்ளது.