ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1964 ல் ஸ்கூல் மாஸ்டர் என்ற மலையாளப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் சிவாஜி. அதன் பிறகு, ஏறக்குறைய 14 வருடங்களுக்குப் பிறகு1978 ல் பிரேம்நசீர் நடித்த தச்சோலி அம்பு என்ற மலையாளப்படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்குப் பிறகு ஏறக்குறைய 20 வருடங்களுக்குப் பிறகு, அதாவது 1997-ல் மோகன்லால் இணைந்து சிவாஜி நடித்த மலையாளப் படம் 'ஒரு யாத்ரா மொழி'.
பிரதாப் போத்தன் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கினார். பிரதாப்போத்தனுக்காகவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சிவாஜி. மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இந்த படத்தில் சிவாஜி தவிர பிரகாஷ்ராஜ், ரஞ்சிதா, நெப்போலியன் ஆகிய தமிழ் நடிகர் நடிகைகளும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். எனவே அப்போதே யாத்ரா மொழி என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடும் வேலைகள் நடைபெற்றன.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 'ஒரு யாத்ரா மொழி' படத்தை இப்போது தமிழில் 'பயணத்தின் மொழி' என்ற பெயரில் டப் செய்யப்பட இருக்கிறது. அப்பா யார் என்றே தெரியாமல் வளரும் மகன், அப்பா மீதுள்ள வெறுப்பினால் அவரை எங்காவது கண்டு பிடித்தால் கொல்வேன் என்று தாயிடம் சபதம் செய்கிறான்.
இந்நிலையில் காணாமல் போன அப்பாவிடமே மகன் வேலை செய்யும் சூழல் ஏற்படுகிறது. இறுதியில் அப்பா - மகன் என்ற உண்மை அவர்களுக்கு தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை! இதில் தந்தையாக சிவாஜியும், மகனாக மோகன்லாலும் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.